மீண்டும் படம் இயக்க வரும் சசிகுமார் :
2008 ஆம் ஆண்டு , சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் இயக்குனராகவும் , படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானார் சசிகுமார் , சுப்ரமணியபுரம் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் , அபார வெற்றியும் பெற்றது , அதனை தொடர்ந்து நாடோடிகள் படத்தினை இயக்கி அதில் நாயகனாக நடித்து அப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது, அதன் பிறகு இயக்கிய ஈசன் திரைப்படம் கொஞ்சம் சறுக்கியது .
ஈசன் படத்திற்கு பிறகு படங்களை இயக்காமல் , பிற இயக்குனர்களின் படங்களில் மு நேர நடிகராக வலம் வருகிறார் சசிகுமார், தற்போது அவர் நடிப்பில் டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் வரும் மே ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது, இப்படத்திற்கான விளம்பரப்படுத்ததில் மும்முரமாக இருக்கும் சசிகுமாரிடம் , ஓர் இணைய சேனல் , நீங்கள் மறுபடியும் எப்பொழுது படம் இயக்குவீர்கள் என்று கேட்டது , அதற்கு அவர் .,
வரும் 2026 ஆம் ஆண்டு ஓர் படத்தை இயக்கி அதில் , ஓர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளேன் , மேலும் அதில் பல நடிகர்கள் இருப்பார்கள் , கிராமம் சார்ந்த கதையாக இருக்கும், இப்படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் விரைவில் தொடங்கும் என்றார் .
No comments:
Note: Only a member of this blog may post a comment.